புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையுடன் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கியதாக புதிய அமைச்சரவையுடன் கூடிய புதிய அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.