நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை எதிர்வரும் மாதங்களில் மேலும் மோசமடையும் அபாயம் காணப்படுவதாக ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடையலாம்.
டொலர் நெருக்கடி, வருமானம் குறைதல், செலவுகள் அதிகரித்தல் போன்றைவை இதற்கு பிரதான காரணங்களாகும் என அவர் தெரிவித்தார்.