இலங்கைக்கு பால் உற்பத்திகளை சலுகைக் கடனாக வழங்குவதற்கு நியூசிலாந்து தீர்மானித்துள்ளது.
இதனை இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அபெல்டன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இரு தரப்பினருக்கும் இடையிலான பொருளாதார மற்றும் மேம்பாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.