அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது.
இதற்கு ஆதரவாக புறக்கோட்டையில் உள்ள சில மொத்த விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
4ஆம் மற்றும் 5ஆம் குறுக்குத் தெருக்களில் உள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக புறக்கோட்டை பகுதியில் சன நடமாட்டம் வழமைக்கு மாறாக குறைவடைந்துள்ளதையும், சில பகுதிகளில் சனநடமாட்டம் இல்லாதிருப்பதனையும் காணக்கூடியதாக உள்ளது.