Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநுகர்வோர் அதிகார சபையின் விசேட அறிவிப்பு

நுகர்வோர் அதிகார சபையின் விசேட அறிவிப்பு

நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இன்று நள்ளிரவு (27) முதல் அமுலாகும் வகையில், அனைத்து உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர், களஞ்சிய உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வழங்குநர்கள், தங்களின் கையிருப்பில் உள்ள தயாரிப்புகளின் விவரங்களை தெளிவாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி வழங்குநரின் பெயர், முகவரி, கொள்வனவு திகதி, விலை, பொருட்களின் வகை, அளவு மற்றும் தொகுதி எண் ஆகியவற்றைக் கொண்ட பற்றுச்சீட்டு அல்லது விலைப்பட்டியலை அல்லது இலத்திரனியல் மூலமான உறுதிப்படுத்தல்களை தம்வசம் வைத்திருக்க வேண்டுமென அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.

No description available.

Keep exploring...

Related Articles