Thursday, May 29, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅலரி மாளிகைக்கு எதிராக ஒலி மாசு முறைப்பாடு

அலரி மாளிகைக்கு எதிராக ஒலி மாசு முறைப்பாடு

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக சத்தம் எழுப்பப்படுவதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

ஒலி மாசுபாட்டிற்கு எதிரான தேசிய கூட்டமைப்பு இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளது.

நேற்று (ஏப்ரல் 27) காலை முதல் அங்கு பிரித் சத்தமாக ஒலிபரப்பப்பட்டு வருவதாகவும், இதற்காக ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒலிபெருக்கிகளை பொருத்துவதற்கு காவல்நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அலரிமாளிகையில் சட்டவிரோதமாக ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவது இலங்கையின் உயர் நீதிமன்றத்தையே அவமதிக்கும் செயலாகும் என அக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles