முன்னாள் அமைச்சர்கள் உட்பட அரசியல்வாதிகள் சிலர் நாட்டை விட்டு வெளியேற தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் சட்டத்தரணி சுனில் வட்டகல தகவல் வழங்கியுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிலரே இவ்வாறு நாட்டை விட்டு வெளியேற நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக அவர்களின் வெளிநாட்டு பயணங்களை தடை செய்வதற்கு உத்தரவிட நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.