ஜனாதிபதி தோல்வியடைந்து விட்டதை நினைவு கூற விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் நடத்தப்பட்ட பேரணியில் கலந்துகொண்டே அவர் இதனைத் தெரிவித்தார்.
குழந்தை போன்ற அமைச்சரவையும், மைனாவான உங்கள் அண்ணாவும், நீங்களும் எமக்கு வேண்டாம் என அவர் தெரிவித்தார்.
இந்த அமைச்சரவையை வைத்துக் கொண்டு இந்த நாட்டை மேலும் நெருக்கடிக்குள் கொண்டு செல்ல வேண்டாம் என ஜனாதிபதியிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
அத்துடன், ராஜபக்ஷ குடும்பத்தினர் அல்லாத அரசாங்கத்திலேயே நாம் இணைவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.