நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் மரக்கறிகள் நாளை மறுதினம் (28) விநியோகிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிராக நாளை மறுதினம் முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்க நடவடிக்கையினால் மரக்கறிகளை அனுப்ப வேண்டாம் என கொழும்பு மெனிங் சந்தை உள்ளிட்ட பல பொருளாதார நிலையங்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.