ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் உடனடியாக பதவி விலக வேண்டும் என விசேட வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பதவி விலகலுக்கு பின்னர் இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கு புதிய இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
