சீனா, இலங்கை மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும், அது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது பிராந்தியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்றும் சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஸெங்ஹொங் (Qi Zhenhong ) இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை குறிப்பிட்டார்.
அத்துடன், எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் சீனாவின் ஆதரவு தொடரும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடன் மறுசீரமைப்பு விடயம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான இலங்கையின் முடிவானது, இலங்கைக்கான 2.5 பில்லியன் டொலர் சீன உதவி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்தியுள்ளதாக, இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.