நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த போராட்டங்களுக்கு பிரபலங்கள் உட்பட பலர் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டின் முன்னணி நிறுவனங்களான MAS ஹோல்டிங்ஸ், ஜோன் கீல்ஸ், ஹேமாஸ் மற்றும் டயலொக் என்பன மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளன.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.