ரம்புக்கனை காவல்துறை பிரிவில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.
அத்துடன், 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
இதனையடுத்து அங்கு அமுலாக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று (21) காலை 5 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.