ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் காவல்துறைமா அதிபர் மற்றும் பல சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, நாளை (22) காலை 11 மணிக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.