Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டு20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

மன்னார் கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான நிலையில் இருந்த படகொன்றை கடற்படையினர் சோதனையிட்டபோது, அதில்  இருந்து 81 கிலோகிராமுக்கும் அதிகமான கேரள கஞ்சா தொகையை மீட்டுள்ளனர்.

குறித்த கேரள கஞ்சா, 20 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியானது என கடற்படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த கேரள கஞ்சா அடங்கிய படகினை காவல்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Keep exploring...

Related Articles