பேருந்து கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதுடன், அனைத்து பேருந்து கட்டணங்களும் 50% ஆக அதிகரிக்கப்படுமென அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை உள்ளிட்ட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பேருந்துகளுக்கு டீசல் பெற்றுக் கொள்வதில் பாரிய சிக்கல் காணப்படுகிறது.
அதற்கு உரிய தீர்வு காணப்படாவிடின், எதிர்வரும் ஜுலைக்குள் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.