காலிமுகத்திடலில் போராட்டம் நடத்தும் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
அங்கு இலட்சக்கணக்கான இளைஞர்கள் தொடர்ந்து 5ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கு இலங்கையின் மூத்த கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரமர் மஹிந்த தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.