நிலுவையில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்ட சாதாரண வெளிநாட்டு கடன் மீள்செலுத்துகையை குறுகிய காலத்துக்கு இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிதியமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவித்தலில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தால் ஆதரிக்கப்படும் பொருளாதார சீரமைப்பு திட்டத்திற்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.