இலங்கையில் மீண்டும் ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு இடமளிக்கக் கூடாது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் வீரருமான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
‘இந்தப் போராட்டம் மிகவும் உறுதியான மற்றும் தைரியமான தலைமுறையால் ஆரம்பிக்கப்பட்டது.மிகவும் தெளிவான நோக்கத்துடன் அது முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கையர்கள் ஒன்றிணைந்து இந்த நெருக்கடியிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இனவாத அல்லது மதவாத பிளவுகளை மீண்டும் சமூகத்திலோ அல்லது அரசியலிலோ பிரவேசிக்க இடமளிக்க கூடாது என நம்புகிறேன். மேலும், இலங்கையில் மீண்டும் குடும்ப ஆட்சிக்கு இடமளிக்கக்கூடாது’ என்றார்.