எரிபொருள் மற்றும் உர நெருக்கடி காரணமாக நெல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய நெல் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் சந்தையில் அரிசி விலை மேலும் உயரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சந்தையில் ஒரு கிலோ நாட்டு அரிசியின் விலை 210 முதல் 220 ரூபாவுக்கும் , ஒரு கிலோ சம்பா அரிசி 230 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன், கீரி சம்பா அரிசி கிலோவொன்று 270 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இம்முறை பயிர்ச்செய்கையை சரியான முறையில் மேற்கொள்ளாவிட்டால் அரிசி விலை மேலும் உயரக்கூடும் என ஐக்கிய நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்தார்.