ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளித்திருப்பதாக, நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் குழுவின் உதய கம்மன்பில MP அறிவித்துள்ளார்.
“அத்தியாவசிய சேவைகளை ஸ்திரப்படுத்துவதற்காக இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கவும், பாராளுமன்ற தேர்தலை நடத்தவும் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் ஊடாக மக்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை தெரிவு செய்ய முடியும் எனவும் கம்மன்பில தமது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தை அவரது குழுவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருந்தார்.