யாழ்.நகர் பகுதியில் லொறி – மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் (7) ஒருவன் உயிரிழந்துள்ளான்.
யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் திங்கட்கிழமை காலை இவ்விபத்து இடம்பெற்றது.
தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை, பின்னால் சென்ற லொறி மோதியதில், குறித்த சிறுவன் லொறி சில்லில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைதானதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.