ரம்புக்கனை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் ரயிலுடன் மற்றுமொரு ரயில் மோதியுள்ளது.
இதனால் பெருமளவிலான டீசல் வீணாகியுள்ளதாக ரயில்தட திணைக்களம் தெரிவித்துள்ளது.
பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலுடன் மோதியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மனித பாதிப்புகள் எவையும் பதிவாகவில்லை.