Wednesday, October 29, 2025
26.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழில் பெண் கொலை: சந்தேக நபர்கள் மூவர் கைது

யாழில் பெண் கொலை: சந்தேக நபர்கள் மூவர் கைது

யாழ்ப்பாணம் – மணியந்தோட்டத்தில் கொலை செய்து புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அயல் கிராமத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் கடந்த முதலாம் திகதி தொடக்கம் காணாமல் போயிருந்தார்.

அதற்கமைய, காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த பெண்ணை கொலை செய்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் நேற்று கைதாகினர்.

பண கொடுக்கல் வாங்கல் காரணமாக எழுந்த முரண்பாட்டினால் சந்தேக நபர்கள் பெண்ணை அடித்துக் கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

பெண்ணின் சடலம் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து அவரின் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது.

சடலம் மீட்கப்பட்ட குழியிலிருந்து அந்த பெண் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles