Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமேலும் 4 பேர் அகதிகளாக தமிழகம் சென்றனர்

மேலும் 4 பேர் அகதிகளாக தமிழகம் சென்றனர்

மன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று (8) அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.

அண்மையில் மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த 4 குடும்பங்களை சேர்ந்த 16 பேர் கடல் வழியாக தனுஷ்கோடி சென்றடைந்தனர்.

அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை மன்னார் முத்தரிப்புத்துறையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தாங்கல் அங்கிருந்து தமிழகம் வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

Keep exploring...

Related Articles