புத்தாண்டுக்காக விசேட நிவாரணப் பொதியொன்றை சதொச அறிமுகப்படுத்தியுள்ளது.
இது சதொச வலையமைப்பு ஊடாக நாளை (09) முதல் விநியோகிக்கப்படவுள்ளது.
இந்த நிவாரணப் பொதிகளை அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் பெற்றுக் கொள்ள முடியும்.
இதில் உள்ள ஐந்து நுகர்வுப் பொருட்கள் தற்போதுள்ள சந்தை விலையை விட குறைந்த விலைக்கு வழங்கப்பட்டுள்ளன.
1950 ரூபா பெறுமதியான இந்த நிவாரணப் பொதியில் உள்ளடங்கும் பொருட்கள்
1) 5 கிலோ நாட்டு அரிசி
2) 5 கிலோ சம்பா அரிசி
3) 400 கிராம் ஹைலண்ட் பால்மா
4) ஒரு கிலோ சிவப்பு சீனி
5)100 கிராம் தேயிலை