Tuesday, February 17, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியாவிடமிருந்து இன்னுமொரு கடன் கேட்க தயாராகும் இலங்கை

இந்தியாவிடமிருந்து இன்னுமொரு கடன் கேட்க தயாராகும் இலங்கை

இந்தியாவிடம் இருந்து எரிபொருள் கடனை புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியா 500 மில்லியன் டொலருக்கான எரிபொருள் கடன் வசதியை வழங்கி இருந்தது.

இந்த கடன் வசதியானது இந்த மாதம் மூன்றாம் வாரத்துடன் நிறைவடையும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

அதற்குப் பின்னர் நாட்டில் விநியோகிக்க எரிபொருள் இல்லாத சூழ்நிலையில், புதிதாக கடன் வசதியை பெறுவதற்கு முயற்சிக்கப்படுகிறது.

அல்லது ஏற்கனவே இந்த கடன் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருளுக்கான கொடுப்பனவுகளை செலுத்தி முடித்து, மீண்டும் கடன் திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்ய முடியும் என கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles