நாட்டில் எதிர்வரும் 15ஆம் திகதி வரை சில பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சூரியனின் வடதிசை நோக்கிய நகர்வின் காரணமாக இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கிறது.
இதன் காரணமாக நாட்டில் பல இடங்களில் கடுமையான வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.