ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி அவர் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அந்த வர்த்தமானி ஊடான அவசரகால சட்டம் புதிய அதிவிசேட வர்த்தமானி ஊடாக 5ஆம் திகதியுடன் இல்லாதொழிக்கப்படுகிறது.