நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கின்றவருக்கு பிரதமர் பதவியை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி ‘எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற அமர்வின் போது பெரும்பான்மையை நிரூபிக்கின்ற உறுப்பினர் யாராக இருந்தாலும் அவருக்கு பிரதமர் பதவியை வழங்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்’ என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
