நாட்டின் நெருக்கடி நிலைமையை போக்கும் முகமாக அனைத்து கட்சிகளும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இது குறித்த அறிவிப்பு சற்று முன்னர் வெளியாக்கப்பட்டது.
உலகளாவிய ரீதியாக ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகள் காரணமாக நாட்டில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.
ஆசியாவின் முதன்மை ஜனநாயக நாடு என்ற அடிப்படையில், இந்த பிரச்சினைக்கு ஜனநாயக ரீதியாகவே தீர்வு காணப்பட வேண்டும்.
அதற்காக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவ படுத்தும் கட்சிகள் அனைத்தும் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்க முன்வர வேண்டும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
