Thursday, June 11, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி வீட்டுக்கு முன்பாக உயிரை மாய்த்துக் கொண்ட நபர்

ஜனாதிபதி வீட்டுக்கு முன்பாக உயிரை மாய்த்துக் கொண்ட நபர்

நுகேகொடை – மிரிஹானையில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டுக்கு முன்பாக 53 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

நாட்டில் தினமும் மேற்கொள்ளப்படும் மின்வெட்டினை உடனடியாக நிறுத்துமாறு கோரி குறித்த நபர் மின்மாற்றியில் ஏறிய பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது அவர் போதையில் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles