Saturday, October 11, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF அறிக்கையை நாடாளுமன்றில் சமர்பிக்க அனுமதி

IMF அறிக்கையை நாடாளுமன்றில் சமர்பிக்க அனுமதி

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார நிலை குறித்து 95 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கை சமீபத்தில் வெளியானது.

அத்துடன், அண்மையில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில், இந்த அறிக்கை தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் அதனை நாடாளுமன்றில் முன்வைக்குமாறு வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles