Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் 21 வீடுகள் தீக்கிரை

கொழும்பில் 21 வீடுகள் தீக்கிரை

கொழும்பு – பாலத்துறை – கஜிமாவத்தை குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

நேற்று (24) நள்ளிரவு 12.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, 2 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 4 தண்ணீர் பாரவூர்திகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

இந்த தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Keep exploring...

Related Articles