Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅடுத்த வாரத்திற்குள் நெருக்கடிக்கு தீர்வு வழங்கப்படும்- நிதியமைச்சர்

அடுத்த வாரத்திற்குள் நெருக்கடிக்கு தீர்வு வழங்கப்படும்- நிதியமைச்சர்

எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடிக்கு அடுத்த வாரத்திற்குள் தீர்வு காணப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (21) இரவு இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், அந்த தொகையில் எரிபொருளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் கீழ்வருமாறு

*அத்தியாவசியப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் கைத்தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 1500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாகப் பெறப்பட்டுள்ளது.

*எரிவாயு இறக்குமதிக்காக டொலர்களை வழங்குவதற்கு மத்திய வங்கி இணங்கியுள்ளது.

*எரிவாயு இறக்குமதிக்கான கடன் கடிதங்களை திறக்கும் நடவடிக்கைகள் செவ்வாய் ஆரம்பிக்கப்படும்.

*நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு, எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி அடுத்த வாரத்திற்குள் தீர்க்கப்படும்.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles