Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகப்பல் வர தாமதமானால் எரிவாயு தட்டுப்பாடு தொடரும்

கப்பல் வர தாமதமானால் எரிவாயு தட்டுப்பாடு தொடரும்

கடந்த 2 தினங்களுக்கு முன்பாக நாட்டை வந்தடைந்த கப்பலில் இருந்து தரையிறக்கப்பட்ட 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தற்போது நிறைவடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இன்றைய தினம் குறித்த நிறுவனத்தினால் 80,000 சமையல் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், 3,500 மெட்ரிக் டன் அளவிலான எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளது.

குறித்த கப்பல் இலங்கைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டால் தொடர்ந்தும் நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் என தெரிவிக்கப்படுகிறது.

Keep exploring...

Related Articles