Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் விநியோகம் வழமைக்கு

எரிபொருள் விநியோகம் வழமைக்கு

வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று காலை வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது 2 கட்டங்களாக அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளிலிருந்து விலகவுள்ளதாக
அந்த சங்கம் அறிவித்திருந்தது.

Keep exploring...

Related Articles