Tuesday, December 23, 2025
29.5 C
Colombo
செய்திகள்உலகம்அமெரிக்க ஜனாதிபதி - கனடா பிரதமருக்கு தடை விதிப்பதாக ரஷ்யா அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி – கனடா பிரதமருக்கு தடை விதிப்பதாக ரஷ்யா அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ ஆகியோருக்கு தடை விதிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்யாவுக்குள் பிரவேசிப்பதற்கான தடைப் பட்டியலுக்குள் அவர்களின் பெயர்களை சேர்ப்பதாக மொஸ்கோ தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் கனேடிய பிரதமருக்கு மேலதிகமாக, அந்த இரு நாடுகளின் முக்கியமான அதிகாரிகள் பலருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டணி ப்ளின்கென், பாதுகாப்புச் செயலாளர் லியோட் அஸ்டின் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோரும் இந்த தடைப்பட்டியிலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

யுக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிராக வொஷிங்டன் தடை விதித்தமைக்கு பதிலளிக்கும் வகையில், மொஸ்கோவின் நடவடிக்கை அமைந்துள்ளதென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles