Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீதிமன்றுக்கு சைக்கிளில் வந்த சட்டத்தரணி!

நீதிமன்றுக்கு சைக்கிளில் வந்த சட்டத்தரணி!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், இன்று (14) காலை எம்பிலிப்பிட்டி நீதிமன்ற வளாகத்திற்கு தனது உத்தியோகபூர்வ கடமைகளுக்காக சட்டத்தரணி விஜித புஞ்சிஹேவா சைக்கிளில் வருகைத் தந்துள்ளார்.

தான் துவிச்சக்கர வண்டியில் வந்தது அரசாங்கத்தை விமர்சிப்பதற்காக அல்ல என்றும், தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப இதுவே தீர்வாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் யாரையும் குற்றம் சாட்டவோ அல்லது புண்படுத்தவோ விரும்பவில்லை, பொதுப் போக்குவரத்தில் ஒரு பொதுவான கொள்கையை உருவாக்க அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்நிலை தொடர்ந்தால் எமக்கான கட்டணங்களும் அதிகரிக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Keep exploring...

Related Articles