Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உலகம்ரஷ்ய துருப்புக்கு எதிரான கருத்துகளை பதிவிட பேஸ்புக் அனுமதி

ரஷ்ய துருப்புக்கு எதிரான கருத்துகளை பதிவிட பேஸ்புக் அனுமதி

யுக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைக் கண்டித்து பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரஷ்ய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு இராணுவ வீரர்களுக்கு எதிரான பதிவுகளை வெளியிட பேஸ்புக் தற்காலிகமாக அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ரஷ்ய படை வீரர்களுக்கு எதிரான பதிவுகளை வெளியிடுவதற்கு ஏற்ற வகையில் விதிமுறைகள் தற்காலிக அடிப்படையில் தளர்த்தப்பட்டுள்ளன. அதே வேளையில் குடிமக்களுக்கு எதிரான நம்பகத்தன்மை வாய்ந்த அச்சுறுத்தல்களுக்கு அனுமதி இல்லை’’ என தெரிவித்துள்ளது

Keep exploring...

Related Articles