Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹாலி-எல மாணவி கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது!

ஹாலி-எல மாணவி கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது!

பதுளை – ஹாலி எல, உடுவரை மேல் பிரிவின் 7 ஆம் கட்டை பகுதியில் 18 வயதான பாடசாலை மாணவியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாலி எல பகுதியில் உள்ள தமிழ் பாடசாலையொன்றில் கல்வி கற்றுவந்த குறித்த மாணவி, வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில், நேற்று ஆயுதமொன்றினால் தாக்கிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

நீண்ட காலம் நிலவிய முன் பகை காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

எவ்வாறாயினும், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் அந்த பகுதியில் இருந்து தலைமறைவாகியிருந்தார்.

இந்நிலையில், காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளையடுத்து அவர் இன்று (09)கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், குறித்த யுவதியை கொலை செய்வதற்காக, சந்தேகநபர் பயன்படுத்திய ஆயுதமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles