Monday, September 15, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொருளாதாரத்தை கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன - நிதியமைச்சர்

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன – நிதியமைச்சர்

டொலர் தட்டுப்பாடு காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்களுடன் நேற்று (08) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எனவே பொருளாதார நெருக்கடி தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.

இதில் அரசாங்கத்தின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி பிரேமநாத் தொலவத்த தவிர்ந்த ஏனைய அனைத்து பின்வரிசை உறுப்பினர்களும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles