Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உலகம்ரஷ்யாவில் மேலும் இரு சேவைகள் நிறுத்தம்

ரஷ்யாவில் மேலும் இரு சேவைகள் நிறுத்தம்

ரஷ்யாவின் புதிய போலி செய்தி சட்டத்தினால் டிக்டொக் செயலி நிறுவனம் தனது நேரடி ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்தியுள்ளதாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும் அறிவித்துள்ளது.

யுக்ரைன் மீது ரஷ்யா தீவிரமான ஏவுகணைத் தாக்குதல், வான்தாக்குதல், பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகின்றது.

எனினும் ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு யுக்ரைன் அரசும் பதிலடி கொடுத்து வருகிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்வதால் அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Keep exploring...

Related Articles