Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபசிலுக்கு சவால் விடும் விமல்!

பசிலுக்கு சவால் விடும் விமல்!

நிதியமைச்சர் நெருக்கடியை அதிகரித்து நாட்டை பேரழிவு நிலைக்கு தள்ள விரும்புவதாக தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (07) அவர் முன்னிலையான போது, ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் வலுசக்தி அமைச்சர் கூறிய கருத்துகளே, எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு காரணம் என சிலர் தெரிவித்து வரும் கருத்துக்கள் தொடர்பில் வருந்துவதாகவும், எதிர்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாட்டை100 வீதம் இல்லாதொழிக்குமாறும் தாம் அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக அவர் தெரிவித்தார்.

இம்மாதம் 5ஆம் திகதிக்கு பின்னர் மின்வெட்டு இருக்காது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில பகுதிகளில் இன்றும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Keep exploring...

Related Articles