Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை சுத்தியலால் தாக்கிய 17 வயது மகள்!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை சுத்தியலால் தாக்கிய 17 வயது மகள்!

பேருவளை பிரதேசத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் தலையை மகளொருவர் சுத்தியலால் தாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

மகளால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த தாய் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காதல் தொடர்பை நிறுத்துமாறு எச்சரித்ததால் குறித்த யுவதி தனது தாயை சுத்தியலால் தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பேருவளை, கலவில கந்த பகுதியைச் சேர்ந்த 17 வயதான யுவதியே தனது தாயை இவ்வாறு தாக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரான மகளை தமது பொறுப்பில் எடுத்துள்ள காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles