Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅமைச்சராக தொடர்ந்து பதவி வகிக்க முடியாது - வாசுதேவ நாணயக்கார

அமைச்சராக தொடர்ந்து பதவி வகிக்க முடியாது – வாசுதேவ நாணயக்கார

அமைச்சராக தொடர்ந்து பதவி வகிக்க முடியாதென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில் ஆகிய இருவரையும் பதவியிலிருந்து நீக்கியதையடுத்து தமக்கு அமைச்சராக கடமையாற்ற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் 11 கட்சிகள் இணைந்து நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டதையடுத்து, அவர்கள் ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், குறித்த மாநாட்டில் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Keep exploring...

Related Articles