யுக்ரைன் – ரஷ்யா போர் இன்று 8 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
இந்நிலையில், ரஷ்யாவின் அரச ஊடக நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் என ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வான் டெர் லியென் அண்மையில் அறிவித்திருந்தார்.
அதற்கமைய, ரஷ்யாவின் அரச ஊடகங்களான ஆர்.டி. ஒலிபரப்பு நிறுவனம், ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் ஆகியவற்றின் செயலிகளை ‘கூகுள்’ நிறுவனம் தடை செய்துள்ளது.
ஐரோப்பா முழுவதும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ரஷ்ய அரச ஊடகங்களுடன் தொடர்புடைய யூடியூப் சேனல்களுக்கு கூகுள் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.