ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க, சர்வதேச வாகன பந்தைய சம்மேளனம் அனுமதியளித்துள்ளது.
யுக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை தமது சம்மேளனம் கண்டிப்பதாக அதன் தலைவர் மொஹம்மட் பென் சுலாயெம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், ரஷ்யா மற்றும் பெலாரஸ் மோட்டார் பந்தைய வீரர்களும், அதிகாரிகளும் நடுநிலைத் தன்மையுடன் மாத்திரம் போட்டியிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், இந்த ஆண்டுக்கான ரஷ்ய க்ரேண்ட் பிக்ஸ் போட்டிகள் இரத்துச் செய்யப்பட்டதை சர்வதேச வாகன பந்தைய சம்மேளனம் உறுதிப்படுத்தியுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் பரிந்துரைகளின்படி, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது