எதிர்வரும் 4 வாரங்களுக்கு பின்னர் நாட்டில் பெருமளவான மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என இலங்கை ஒளடத ஒன்றியத்தின் தலைவர் ஏ.ஜே.பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நாணய கடிதங்கள் விடுவிக்கப்படாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள மருந்தகங்களில் தற்போது பெரசிட்டமோல் உள்ளிட்ட சில மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.