நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும் ஏழரை மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இன்று (03) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் 5 மணி நேரத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
அத்துடன், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில் இரண்டரை மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.